மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 04:09
கோவை; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அமாவாசையும் திங்கட் கிழமையும் இணைந்து வரும் நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சிவனை வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் யாவும் நடந்தேறும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் இன்று ஆவணி அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.