தானேவில் சத் பூஜை கோலாகலம்: ஏராளமான பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2012 11:11
வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற சாத் பூஜை, இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீபாவளியை முன்னிட்டு ஆண்டு தோறும் சாத் பண்டிகையினை 6 நாட்கள் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கங்கை நதிக்கரையோரம் சூரிய பகவானை வழிபடுவதற்காக பொதுமக்கள் அக்கம் பக்கத்தினைச் சேர்ந்த கிராமத்தினர் என ஏராளமானோர் குவிந்தனர்.