எல்லை பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2024 04:09
மானாமதுரை; மானாமதுரை எல்லை பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே அமைந்துள்ள எல்லை பிடாரியம்மனை ஊரின் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். வருடம் தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் ஒரு வார காலம் விரதமிருந்து தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளை மண் சட்டிகளில் வைத்து தீப்பந்தங்களை ஏற்றி மேள தாளங்கள் வழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர். இந்த விழாவிற்காக இன்று காலை கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.பின்னர் எல்லைப்பிடாரி அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் அம்மனை வழிபட்டு தங்களது விரதத்தை துவக்கினர்.