கூடலுார் முத்தாலம்மன் கோவிலில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2024 10:09
கூடலுார்; கூடலுார் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.
கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து எல்.எப்.ரோடு, மெயின் பஜார், நடுத்தெரு, பெட்ரோல் பங்க் தெரு வழியாக கோயிலை அடைந்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முளைப்பாரி, மாவிளக்கு எடுத்த பக்தர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பக்தர்கள் மாறுவேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம், ஒக்கலிகர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.