கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2024 10:09
கன்னியாகுமரி; கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்கம் வடிவில் பூஜை கள் நடத்தப்பட்டது. தொ டர்ந்து 10.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள், சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்தனர். ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.