பதிவு செய்த நாள்
26
செப்
2024
02:09
திருப்பூர், காங்கயம் – சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பக்தர்கள் கனவில் சுப்ரமணிய சுவாமி உத்தரவிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். அதன்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். புடவை வைக்கப்பட்டுள்ளதால், ஜவுளி, நெசவு தொழிலில் முன்னேற்றம் வரும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.