பதிவு செய்த நாள்
26
செப்
2024
03:09
திட்டக்குடி; திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்குச்சொந்தமான திருக்குளம் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்குச்சொந்தமான திருக்குளம் 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திருக்குளம் புனரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு இரண்டு கட்டங்களாக ஒருகோடியே 27லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. திருக்குளம் சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி உள்ளிட்டவை நடக்கிறது. அமைச்சர் கணேசன், இன்று காலை திருக்குளம் புனரமைப்புப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கோவில் செயல்அலுவலர் சிவப்பிரகாசம், தக்கார் தமிழ்ச்செல்வி, நகராட்சி சேர்மன் வெண்ணிலா கோதண்டம், துணைசேர்மன் பரமகுரு, தி.மு.க., ஒன்றியசெயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.