பதிவு செய்த நாள்
27
செப்
2024
04:09
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்திருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் புரட்டாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடுமலை, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். குறுமிளகையும் உப்பையும் திருமூர்த்திமலை மீது இட்டு வேண்டிக் கொண்டால், தங்களது குறைகள் நீங்குகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க இக்தலத்தில் புரட்டாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று மும்மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.