பதிவு செய்த நாள்
28
செப்
2024
12:09
கோவை ; புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை மருதமலை ரோடு முல்லை நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
* புரட்டாசி மாதம் ஏகாதசி விரதம் மற்றும் புரட்டாசி சனி கிழமையையொட்டி கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் | பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
* புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை யொட்டி, மருதமலை மெயின் ரோடு பாப்பநாயக்கன் புதூர் ஸ்ரீமத் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீராமருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சீதாதேவி - லட்சுமணர் - ஆஞ்சநேயர் சமேதரராக ஸ்ரீ ராமபிரான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.