பதிவு செய்த நாள்
29
செப்
2024
08:09
நவராத்திரி பண்டிகை, வரும் அக்., 3ல் துவங்கி, 12ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. வீடுகளை சிலைகளால் அலங்கரித்து, விருந்தினர்களை மகிழ்விக்க நவராத்திரி கொலு பொம்மைகள் ஆங்காங்கே விற்கப்படுகின்றன. அந்த வகையில், வட சென்னை, ராயபுரம் கல்மண்டப பகுதியில் உள்ள ‘லக்கிபாட்’ நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான பொம்மைகளுடன், நவராத்திரி கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது. சுவாமி பொம்மைகள், புராணங்களை காட்சிப்படுத்தும் பொம்மைகள், முக்கிய தலைவர்களின் பொம்மைகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. புதிதாக கொலு வைக்க விரும்புவோர் இங்கே வந்தால், நவராத்திரிக்கான அனைத்து பொருட்களையும் வாங்கிச் செல்லலாம் என, நிறுவனத்தின் நிர்வாகிகள் சசிபிரியா, மஹாலட்சுமி தெரிவித்தனர்.