வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது முருகன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2024 10:09
விக்கிரமங்கலம்; விக்கிரமங்கலம் அருகே எலக்ட்ரீசியன் ஆனந்தன் 42, தனலட்சுமி தம்பதியர் வசித்த பழமையான வீட்டை இடித்து விட்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தொழிலாளர்கள் 5 அடி தோண்டிய போது ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆண்டி அவதார முருகன் சிலை கிடைத்தது. கற்சிலையான அதனை, அப்பகுதி கோயில் அருகே வைத்து கிராமத்தினர் வழிபட்டனர். விக்கிரமங்கலம் எஸ்.ஐ., அசோக்குமார், தனிப்பிரிவு போலீஸ் அய்யர் மூலம், உசிலம்பட்டி துணைத் தாசில்தார் மணிமேகலை, வருவாய் துறையினரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. நாகையா என்ற சிற்பியிடம் ஆனந்தனின் தாத்தா இந்த இடத்தை வாங்கி உள்ளார். இதனால் சிற்பி செதுக்கிய நுாறாண்டு பழமையான சிலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.