பதிவு செய்த நாள்
30
செப்
2024
04:09
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. செண்பகவல்லி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபால்பட்டி: கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழா பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போலவே சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக பூஜைகளும், தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோவில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவில், சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.