Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோயிலில் சக்தி கொலு; ... தசரா விழா கோலாகல துவக்கம்; விழாக்கோலம் பூண்டது மைசூரு தசரா விழா கோலாகல துவக்கம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
10:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, நேற்று காலை காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை மற்றும் ஸுவாஸினி பூஜை உள்ளிட்டவையும் நடந்தது.


இரவு 8:00 மணிக்கு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்ற சங்கீத கச்சேரியும் நடந்தது. காமாட்சியம்மனுக்கு முக்கிய நாட்களில், நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸப்தசதி பாராயணமும் நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவத்தின் எட்டாம் நாளான அக்., 10ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், 11ம் தேதி இரவு சரஸ்வதி பூஜையும், 12ம் தேதி இரவு விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும், 13ம் தேதி இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும், நவராத்திரி உற்சவம் நிறைவு நாளான அக்., 14 காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் புஷ்ப கைங்கர்யமும் நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவத்தையொட்டி தினமும் இரவு 7:30 மணிக்கு, காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் டிரஸ்ட் சார்பில், காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில், பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் இதர கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன், ஆதீன பரம்பரை தர்மாகர்ததாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், காமட்சி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 
temple news
கோவை; நவராத்திரி பண்டிகை தொடங்கியதை யொட்டி கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் கொலு பொம்மை தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar