Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை நடைபெறும் ... ஜெருசலேம் புனித பயண திட்டம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு! ஜெருசலேம் புனித பயண திட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: தூண்களுக்கு பதில் தென்னை மரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2012
10:11

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபத்தில் குறைவாக உள்ள தூண்களுக்கு பதில், தென்னை மரங்கள் நட்டு பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும், திரு அத்யயன உற்சவம் எனப்படும், வைகுண்ட ஏகாதசி திருவிழா, உலக பிரசித்திப் பெற்றது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான, சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு, 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கு நடக்கிறது. தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளும் வேடுபறி வைபவம், 31ம் தேதியும், தீர்த்தவாரி, ஜனவரி, 2ம் தேதியும், நம்மாழ்வார் மோட்சம், 3ம் தேதியும் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர், 14ம் தேதி முதல், தொடர்ந்து ஜனவரி, 2ம் தேதி வரை, மூலவருக்கு முத்தங்கி அலங்கார சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாமணி மண்டபத்தில் ரத்ன அங்கியுடன் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். திருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறுவதாக ஐதீகம். ஆனால், "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்பதால், ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களும், புது தென்னங்கீற்றுகளை கொண்டும், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், விழா முடிந்த பிறகு, மரங்களும், கீற்றுகளும் அகற்றப்பட்டு விடுகின்றன. வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கவுள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் முன், 40 தென்னை மரங்கள் நட்டு, பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கி தொடர்ந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar