Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் ... கோவை: கோவை மண்டலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி கோயில் தேருக்கு ரூ.16 லட்சத்தில் புதிய இரும்பு சக்கரங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
10:11

கடையநல்லூர்: நூறு ஆண்டுகளுக்கு மேலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் திருத்தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் 16 லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்பட இருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான திருத்தேர் நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதாகும். இத்தேரில் உள்ள சக்கரங்கள் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய சக்கரங்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டு வந்தது. தைப்பூச திருவிழாவின் போது திருத்தேரோட்டம் பண்பொழி நான்கு ரதவீதி வழியாக நடத்தப்படுவதுண்டு. தேர் சக்கரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஆண்டு மாற்று ஏற்பாடாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இக்கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் அமைத்திட வேண்டுமென கோயில் நிர்வாகம், டவுன் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், அதிமுக செயலாளர் பரமசிவன், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் மற்றும் மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர்.இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பண்பொழி கோயில் தேருக்கு புதிய சக்கரங்கள் பொருத்த 16 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.புதிய இரும்பு சக்கரங்கள் அமைத்திட 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத்துறை உயரதிகாரிகள் ஆகியோருக்கு பொதுமக்கள், பக்தர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar