சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 03:10
தென்காசி ; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் இன்று ஐப்பசி திருக்கல்யாணம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் தவசு காட்சி வரும் 28ம் தேதி காலை 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்று மாலை சங்கரலிங்க சுவாமி பிரியாவிடை வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி கொடுத்தல் நடைபெறும்.