Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி முதல் நாள்; வால்பாறை ... திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்; 16 வகை சிறப்பு அபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மானாமதுரை அருகே முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 அக்
2024
03:10

மானாமதுரை; மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்திற்கு மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் கள ஆய்வுக்குச் சென்ற போது அங்குள்ள நீலமேக விநாயகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பு கோவிலின் உட்புறத்தில் உள்ள விநாயகர் சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்த சிற்பம் என்பதை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது ; இந்த சிற்பம் 3அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது, இந்த சிற்பமானது 4 கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. பின் வலது கரத்தில் மழுவும் பின் இடது கரத்தில் பாசம் என்ற ஆயுதமும் முன் வலது கரத்தில் உடைந்த தந்தத்தையும் முன் இடது கரத்தில் மோதகத்தை தும்பிக்கையால் எடுத்தபடியும் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது, தலையில் கரண்ட மகுடம் செதுக்கப்பட்டுள்ளது.மேலும் மார்பில் சவடி,சரப்பளி, கண்டிகை போன்ற ஆபரணங்கள் அணிந்தபடியும் 2 கால்களிலும் தண்டை அணிந்தபடியும் லளிதாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தினை பார்க்கும் போது முற்கால பாண்டியரின் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டா துவாதசி பட்டோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
கோவை; மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும்  அருந்தவ செல்வி உடனமர் அன்னூர் ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar