மணிமுத்தாறில் ஐப்பசி முதல் தீர்த்தவாரி; பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2024 11:10
தேவகோட்டை; தேவகோட்டை யில் ஐப்பசி முதல் நாளும், கடைசி நாளன்றும் தேவகோட்டை கோயில்களிலுள்ள சுவாமிகள் மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம். ஐப்பசி முதல் நாளான நேற்று அதிகாலையிலேயே தேவகோட்டை கைலாசவிநாயகரும் இதனைத் தொடர்ந்து இறகுசேரி மந்திர மூர்த்தி விநாயகரும் மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். நேற்று மதியம் தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கோதண்டராமர் ஸ்வாமி கோயில், கிருஷ்ணராஜபுரம் கிருஷ்ணன் கோயில், கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் இருந்து அகத்தீஸ்வரர் கோயில் உட்பட ஏழு கோயில்களில் இருந்து சுவாமிகள் மணிமுத்தாறுக்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சைவ திருக்கோயில்களில் இருந்து சுவாமிகள் சார்பில் அட்சரத்தேவர்களையும், வைணவ கோயில்களில் இருந்து சக்கரத்தாழ்வார்களையும் எடுத்து சென்று அபிஷேகங்கள் செய்த பின் புனித நீரால் தீர்த்தவாரி செய்தனர். இதனைத் தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு மீண்டும் உற்ஸவ மூர்த்திகள் உடலில் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.