கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை உத்திரக்குளம் பகுதியில், நாகாத்தம்மன் மற்றும் சின்ன புட்லுார் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 12ம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, பெண்கள், அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆரத்தி நடைபெற்றன. மாலை ஊர் கூடி பொங்கல் வைத்தல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன.