திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தங்க நாகாபரண கவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 02:10
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண கவசம் அணிவிக்கப்பட்டது. அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் குமாரபாளையத்தை சேர்ந்த சவுண்டப்பன், டாக்டர் நிர்மலா தம்பதிகளின் பிரார்த்தனை காணிக்கையாக ரூ. 20 லட்சம் மதிப்பில் மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு தங்கமுலாம் பூசிய நாகாபரண கவசம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க நாகா பரண கவசம் சாந்தி மகா தீபாராதனை நடந்தது.