காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி தொடங்கியது. காரைக்கால் கயிலாசநாத சுவாமி ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோவில் தேவஸ்தானத்தில் விமான பாலஸ்தாபனம் விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி வினாயகர் பூஜை,புண்யாக வாஜனம்,தேவதா அனுக்ஞை சங்கல்பம் மகா யாகத்துடன் துவங்கியது. இன்று சோமநாயகி அம்பிகா சமேத,சோமநாத சுவாமி,காரைக்கால் அம்மையார்,பூர்ணபுஷ்கலா அய்யனார் ஆகிய ஆலயங்களின் அனைத்து விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹீதி தீபாரதனையுடன் அனைத்து விமானங்களுக்கு பாலாலய கும்பாபிஷேகம் திருப்பணி முகூர்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ.,கோவில் தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.