Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ... பாளை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமான பாலாலயம் பாளை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

22 அக்
2024
10:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம்அருகில், நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி, காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:00 மணிக்கு விமானத்திற்கும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.


அழிசூர் திரவுபதியம்மன்; உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி காலை 8:00 மணிக்கு புதிய சிலைகளுக்கும், விமான கலசங்களுக்கும் கரிகோலம் நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கும், தொடர்ந்து திரவுபதியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடந்தது.


ஊத்துக்காடு மாரியம்மன்; ஊத்துக்காடு மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தின் மீது, சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். பிற்பகல், 12:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar