பதிவு செய்த நாள்
22
அக்
2024
11:10
திருநெல்வேலி; பாளை மேலவாசல் பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமான பாலாலயம் நேற்று நடந்தது. பாளை மேலவாசல் பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணி மேற்கொள்ளமுடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கோயில் விமான பாலாலயம் நேற்று முன்தினம் காலை விஸ்வரூபம், காலைசந்தி அபிஷேக ஆராதனைகளுடன் துவங்கின. மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. இதனையடுத்து ரக்ஷாபந்தன், முதல் காலயாகசாலை பூஜை, பூர்ணாகுதி, இரவு தீபாராதனை நடந்தது. 2ம் நாளான நேற்று காலை2ம் கால யாகசாலை பூஜை, திரவ்யகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு கடம்புறப்பாடு, பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி விமானம் மற்றும் பரிவாரமூர்த்திகள் விமானங்கள் பாலஸ்தாபனம் நடந்தது. இதனையடுத்து விநாயகர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.