அன்னூர்; பழமையான வடமலை ராயர் கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் பழமையான வடமலை ராயர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகம்பாளையத்தைச் சேர்ந்த தேவராஜனை அறங்காவலராக நியமித்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பதவியேற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பார். பதவியேற்ற பின்னர், தற்போதைய கோவில் தக்காரிடம் உள்ள பொறுப்புக்களை பெற்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கோவில் நலனுக்கும், வருமானத்தை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகளை துறை அனுமதியோடு செய்ய வேண்டும். அன்றாட நிர்வாகத்தை நிர்வகித்து வரவேண்டும். திருக்கோவிலில் துறையின் அனுமதி பெற்று திருப்பணி மற்றும் கட்டுமானப் பணி செய்ய வேண்டும். துறையின் முன் அனுமதியின்றி எந்த பணிகளையும் செய்யக்கூடாது, என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.