நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா; பச்சை சாத்தி உலா வந்த காந்திமதி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 11:10
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை சாத்தி உலா வந்தார்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் முக்கிய நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருநெல்வேலி நகா் நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. விழாவையொட்டி இன்று காந்திமதி அம்மன் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 28ம் தேதி மதியம் 12.00 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் அன்னைகாந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.