பதிவு செய்த நாள்
24
நவ
2012
11:11
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 22 நாட்களில், 31 லட்சம் ரூபாய், உண்டியல் வசூல் மூலம் கிடைத்து உள்ளது.திருத்தணி முருகன் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள், தங்கள் நேர்த்திக் கடனாக, பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை, உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியலில் வசூலாகும் தொகை, மாதம் ஒரு முறை கோவில் நிர்வாகத்தால் திறந்து எண்ணப்படும். இம்மாதம், 1ம் தேதி முதல், 22ம் தேதி வரை, உண்டியலில் வசூல் ஆன தொகை, நேற்று முன்தினம், திறந்து எண்ணப்பட்டது. 140 ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில், ரொக்கப் பணமாக, 31 லட்சத்து, 5,856 ரூபாயும், 293 கிராம் தங்கமும், 2,002 கிராம் வெள்ளியும் வசூலானது. 22 நாட்களில், இவ்வளவு தொகை வசூலானது, இதுதான் முதல்முறை.