பதிவு செய்த நாள்
24
நவ
2012
11:11
புதுச்சேரி: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.திருவண்ணமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06810), காலை 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து, 27 மற்றும் 28ம் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில்(06809 எண்), இரவு 11.45 மணிக்கு புதுச்சேரி வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் புதுச்சேரி, வில்லியனூர், சின்னபாபுசமுத்திரம், வளவனூர், விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், தண்டரை ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இத்தகவலை, புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் மணிராஜன் தெரிவித்துள்ளார்.