Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ... விளாச்சேரியில் தயாராகும் மெகா களிமண் அகல் விளக்குகள் விளாச்சேரியில் தயாராகும் மெகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் மருதாருடையார் அய்யனார்
எழுத்தின் அளவு:
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் மருதாருடையார் அய்யனார்

பதிவு செய்த நாள்

11 நவ
2024
12:11

ராமநாதபுரம் ; குதிரை எடுப்பு விழாவின் போது நேர்ந்துகிட்டு காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் உள்ள மருதாருடையார் அய்யனார் கோயிலாகும். முருகனுக்கு வள்ளி, தெய்வானை போல் மருதாருடையார் அய்யனாருக்கு வலதுபுறம் அன்னபூரணி, இடதுபுறம் புஷ்பகலா என்ற மனைவியும் உள்ளனர்.இங்கு கடந்த நான்கு, ஐந்து தலைமுறையாக மருதாருடையார் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா தொட்டு தொடர்ந்து பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து விழாக்களை நடத்துகின்றனர். முக்கியமாக கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் எருதுகட்டு விழாவின்போது வடம் கட்டிவிட்டு வருகின்றனர்.மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி விழாக்கள் நடைபெற்று வருகிறது. விழாவின்போது ஆவணி முதல் வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கும். காப்பு கட்டிய அடுத்த வெள்ளி, சனிக்கிழமை குதிரை எடுப்பு விழா, எருதுகட்டு விழா நடைபெறும்.புத்தூர் கிராமத்தில் இருந்து 7 கி.மீ., குதிரை, தவழும் பிள்ளைகள் ஊர்வலமாக தூக்கிவரப்பட்டு கிராமத்தில் கண்திறப்பு செய்து சிறப்புபூஜை நடைபெறும். இதில் காப்புகட்டும் பக்தர்கள் நீண்ட நாள் திருமணதடை, குழந்தையின்மை, வெளிநாடு வேலை, தீராத நோய் நிறைவேற உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் வைத்து காப்புகட்டி வருவார்கள். இவர்களின் நேர்த்திக்கடன் அடுத்த திருவிழா நடைபெறுவதற்க்குள் நிறைவேறிவிடும்.அவர்கள் நேர்த்திக்கடனாக நன்கொடை அளித்து வருகின்றனர்.சிறப்பு என்னவென்றால் விழாவின் போது 400 முதல் 500 பேர் நேர்த்திக்கடன் நிறைவேறி சிறப்பு நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் குறிப்பாக உலையூர் சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் இதில் பயனடைந்துள்ளனர்.நினைத்த காரியம் நிறைவேறி வரும் மருதாருடையார் அய்யனார் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.


எப்படி செல்வது?; முதுகுளத்தூரில் இருந்து 16 கி.மீ., பரமக்குடியில் இருந்து 27 கி.மீ.,

விசேஷ நாள்; ஆவணி முதல் வெள்ளிக்கிழமை, குதிரை எடுப்பு விழா

நேரம்; காலை 6:00 - 12:30 மணி, மாலை 5:00 - 8:30 மணி.

அருகில் உள்ள கோயில்; உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி 30 கி.மீ.,

நேரம்; காலை 5:00 - 12:00 மணி, மாலை 4:00 - 7:30 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar