Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுயம்பு பெருமாள் சுவாமி கோயிலில் ... சிருங்கேரி சன்னிதானத்தின் சென்னை விஜய யாத்திரை நாளை நிறைவு சிருங்கேரி சன்னிதானத்தின் சென்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 386 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் கல்வெட்டு
எழுத்தின் அளவு:
குளத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 386 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் கல்வெட்டு

பதிவு செய்த நாள்

11 நவ
2024
05:11

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் குளத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த கல்வெட்டு, 386 ஆண்டுகளுக்கு பழமையான சேதுபதி மன்னரின் வரலாற்றை கூறுகிறது.


பரமக்குடி அருகே குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பர்ஜித் தகவலின்படி, பள்ளி ஆசிரியர்கள் பால்துறை, ராமமூர்த்தி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுருவுக்கு கல்வெட்டு பற்றி தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தொன்மை பாதுகாப்பு மன்ற 9ம் வகுப்பு மாணவர்கள் கவின் ராஜ் பாண்டியன், பிரியதர்ஷன், அபிஜன், ரித்திக் ஆகியோருடன் கல்வெட்டு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது.


ராஜகுரு கூறிய போது: கல்வெட்டில் சகாப்தம் 1560ன் மேல்ச் செல்லா நின்ற வெகுதானிய வருஷம் ஆவணி 5ல் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமிள மடை உடைய நாயன் தழவாயான் சேதுபதி காத்த தேவர் புண்ணியம் என 12 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி. 1538. இது இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தழவாயன் சேதுபதி காலத்தைச் சேர்ந்தது. கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும் அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பையும் குமிழி மடை என்பர். இதன்படி குமிழி மடையை மன்னர் அமைத்து தந்ததாக கல்வெட்டு தெரிவிக்கிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு பட்ட காணிக்கையாக இரு ஊர்களை தானமாக கொடுத்த செப்பேடு மூலம் கி.பி. 1632 முதல் ஆட்சியில் இருந்ததாக கொள்ள முடியும். மேலும் முதலூரில் இம்மன்னர் கி.பி. 1637ல் குளமும், கலிங்கு மடையும் அமைத்து கொடுத்ததாக கல்வெட்டு உள்ளது. அப்போது நீர்ப்பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறிய முடிகிறது. இந்த கல்வெட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் பகுதியில் கண்டெடுத்து துணி துவைக்க பயன்படுத்தி வந்ததாக அவ்வூரைச் சேர்ந்த சிவகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பள்ளி தொன்மை பாதுகாப்பு மற்றும் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar