Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூசாரிபட்டி மந்தை முத்தாலம்மன் ... திருவாவடுதுறை கோவிலில் திருமூலர் குருபூஜை; திரளான பக்தர்கள் தரிசனம் திருவாவடுதுறை கோவிலில் திருமூலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருஞ்சேரி கண்காணாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பெருஞ்சேரி கண்காணாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 நவ
2024
03:11

மயிலாடுதுறை; பெருஞ்சேரியில் கோலாகலமாக நடந்த கண்காணாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் சமேத கண்காணாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தாருகாவன முனிவர்களின் ஆணவம் அடக்கப்பெற்று சிவபெருமான் காட்சி அளித்ததால் பேரு பெற்ற முனிவர்கள் இக்கோவிலை அமைத்தனர். இக்கோவிலில் செல்வ விநாயகர், ஸ்வர்ணா கர்ணன் பைரவர், ஐயப்பன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10.30க்குள் சதுர்த்தி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய தனுசு லக்னத்தில்  நடந்தது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன், 12ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத  சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்தி களின் விமான கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனை அடுத்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூஜைகளை சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar