Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவிலில் ... கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னை கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 நவ
2024
03:11

சென்னை; புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.


சென்னை புரசைவாக்கத்தில், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பங்கஜாம்பாள் சமேத கங்காதரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருப்பணி நடந்து, 16 ஆண்டுகள் ஆகிவிட்டதால், திருப்பணிகளை செய்து, கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி, 4.82 கோடி ரூபாயில், 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில், 1.29 கோடி ரூபாயில் திருக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு, 6 கோடி ரூபாயில் புதிய தங்கத்தேர் செய்ய பணிகள் நடந்து வருகிறது. தற்போது, திருப்பணி முடிந்த நிலையில், நேற்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, கடந்த, 24ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, கோபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாசாலை பூஜைகள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து அவப்ருத யாகம், யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதி, கடப்புறப்பாடு நடந்தது., ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டது. பின், பங்கஜாம்பாள் சமேத கங்காதரேஸ்வரர், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பநீர் சேர்த்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானின் அருளைப் பெற்றனர். இந்நிகழ்வில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar