வீர ஆஞ்சநேயருக்கு மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 04:12
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.இதில் சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
கோவை பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சரஸ்வதி தேவியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.