Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் சாதுக்களுக்கு ... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விழாக்கோலம்; கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி துவக்கம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை சொக்கப்பனை தீபம் : பாரம்பரியம் காக்கும் கிராமத்தினர்
எழுத்தின் அளவு:
கார்த்திகை சொக்கப்பனை தீபம் : பாரம்பரியம் காக்கும் கிராமத்தினர்

பதிவு செய்த நாள்

03 டிச
2024
04:12

திருப்புத்தூர்; திருப்புத்தூர் கிராமங்களில் கார்த்திகை தீப விழாவன்று சொக்கப்பனை கொளுத்த பாரம்பரிய முன்னேற்பாடுகளில் கிராமத்தினர் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது.


கார்த்திகை தீபத் திருவிழாவன்று  கோயில்கள் முன்முற்றத்தில் பனை ஓலைகளை கூம்பு போன்று கோபுரமாக கட்டி சொக்கப்பனை கொளுத்தி, தீபத்தை வழிபடுவது பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த சொக்கப்பனை தயாரிப்பதற்காக  காடுகளில் மரம் வெட்டி கொண்டுவருவதை கிராமத்தினர் பாரம்பரியமாக செய்கின்றனர். பல இடங்களில் நடைமுறை மாறினாலும் சில கிராமங்களில் பாரம்பரியத்தை கடைபிடிப்பதைப் பார்க்க முடிகிறது. திருப்புத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டியில்  மூன்று நாட்களுக்கு முன்பாக கிராம பெரியவர்கள்,இளைஞர்கள் காட்டிற்கு சென்று பல கிளைகளுடன் கூடிய வேளாமரத்தை வெட்டி பலரும் சேர்ந்து கையில் தூக்கியவாறே கிராமத்திற்கு சென்றனர். இன்று அதற்கான பனை ஓலைகளை வெட்டி சேகரிக்கின்றனர். பணியாட்கள் இல்லாமல் கிராமத்தினரே முன்னின்று செய்கின்றனர். வசதி அதிகரித்தாலும் தாங்களே சென்று இப்பணிகளை இவர்கள் செய்கின்றனர். கார்த்திகைத் தீபத்தன்று அம்மன் கோயில் முன் வெட்டி கொண்டு வந்த மரத்தை நட்டு,பனை ஓலைகளால் உயரமான கோபுரமாக்கி சொக்கப்பனை கொளுத்த உள்ளனர். எரிந்த பின் சொக்கப்பனையில் இருந்த பனை மட்டையை போட்டி போட்டு எடுத்துக் கொண்டு அவர்களின் வயல்களில் சனி மூலையில் செருகி வைப்பார்கள். சாம்பலை வயல்களில் தெளிப்பதும் உண்டு.  சொக்கப்பனை கொளுத்த புராண காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக  ‛ஐப்பசி அடைமழையில் பூச்சியினங்கள் முட்டையிடும் காலம். கார்த்திகை மாதத்தில் முட்டைகளில் இருந்து பூச்சியினங்கள் வெளிவரும் காலம்.பூச்சிகள் பயிர்களை அழிக்காமல் தடுக்கவே சொக்கப்பனை கொண்டாடப்படுகிறது.  இந்த ஓளியில் கவரப்படும் பூச்சிகள் தீயில் வீழ்ந்து மடியும். பயிர்கள் சேதத்தில் இருந்து தப்பித்து விடும்.’ என்றும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar