Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை ... புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலை சுற்றி அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு; நிரந்தர தீர்வு எப்போது?
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலை சுற்றி அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு; நிரந்தர தீர்வு எப்போது?

பதிவு செய்த நாள்

04 டிச
2024
10:12

வடபழனி, ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் பல வகையான ஆக்கிரமிப்புகளால், தரிசிக்க வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பிரச்னைக்கு, சென்னை மாநகராட்சி, அறநிலையத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் என்பதால், அதிகாலை முதல் இரவு வரை, ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் வடபழனி ஆண்டவரை தரிசித்து செல்கின்றனர். இதனால், செவ்வாய் கிழமையான நேற்று, வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.


ஆற்காடு சாலையில் இருந்து, கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகளால், நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், கோவில் நுழைவாயிலை பக்தர்கள் அடைய மிகவும் சிரமப்படுகின்றனர். பக்தர்களை இறக்கிவிடும் ஆட்டோக்களும், உடனடியாக செல்லாமல் அடுத்த சவாரி வரும் வரை காத்திருப்பதாலும் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், மாடவீதிகளிலும் நடைபாதை கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்பால், பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டனர். மனக்குறையை போக்க வரும் பக்தர்கள், கோவிலுக்குள் நுழைந்து, வெளியே செல்வதற்குள், பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து, மனச்சுமையுடன் திரும்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி, அறநிலையத்துறை, போக்குவரத்து போலீசார், காவல்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து, ஆய்வு நடத்தி பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar