வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2024 12:12
வால்பாறை; வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவில் நேற்று முன் தினம் இரவு,7:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பஜனை பாடல்களை பாடி ஐயப்பனை வழிபட்டனர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.