Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் குவியும் பக்தர்கள்; ... கம்பமெட்டு ரோட்டில் பாலிதின் பைகள் : ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க வேண்டும் கம்பமெட்டு ரோட்டில் பாலிதின் பைகள் : ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

20 டிச
2024
11:12

சபரிமலை: நடப்பு மண்டல காலத்தில் சபரிமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். நவ., 16ல் மண்டல காலம் துவங்கியது. கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் நடத்தி திரும்பினர். பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.


மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தினசரி 92,000 பக்தர்கள் தரிசனம் நடத்தினர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம், கட்டமாக அனுப்பப்பட்டனர். டிச., 18 இரவு 10:00 மணி வரை 26 லட்சத்து, 8,349 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். இது நேற்று 27 லட்சத்தை கடந்தது. மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. டிச., 22 காலை 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டு, 25 மதியம் பம்பை வந்தடைகிறது. இங்கு கணபதி கோவில் அருகே தரிசனத்திற்காக வைக்கப்படும் தங்க அங்கி பின்னர் தலை சுமையாக சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று மாலை, 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச., 26-ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று அதிகாலை, 3:30க்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை, 11:00 மணியுடன் நிறைவுறும். மதியம், 12:00-க்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும். மாலை, 4:00க்கு நடை திறந்து இரவு, 10:00 அல்லது 11:00க்கு நடை அடைக்கப்படும். அதன்பின், மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை, 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 
temple news
சபரிமலை: மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி, ... மேலும்
 
temple news
சபரிமலை; எருமேலியில் நேற்று நடைபெற்ற அம்பலப்புழா - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar