Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்புரம் ஐயப்பன் கோவிலில் சுவாமி ... கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் சுவாமி தரிசனம் கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 டிச
2024
04:12

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை நாரலப்பள்ளி பஞ்., நலகுண்டலப்பள்ளி அருகே, மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, 3 கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர். 


இது குறித்து, ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பொதுவாக, பாறை ஓவியங்களை வரைய பயன்படுத்திய வண்ணம் மற்றும் அவை வெளிப்படுத்தும் கருத்தை, 3 காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை, செஞ்சாந்து புதிய கற்காலத்தையும், வெண்சாந்து பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்று காலம் எனவும் வகைப்படுத்துவர். கண்டறியப்பட்ட இந்த பாறை ஓவியங்கள், மூன்று கால கட்டத்திலும் வரையப்பட்டுள்ளன. செங்குத்து பரப்பிலுள்ள, 2 மனித உருவங்களில், ஒன்று செஞ்சாந்திலும், மற்றது வெண்சாந்திலும் இறந்தவரின் நினைவாக வரையப்பட்டுள்ளது. இந்த மரபே பின்னாளில் நடுகல்லானது. கூரை பரப்பில் அலங்கரிக்கப்பட்ட சாய்ந்த பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரண்டு சக்கரங்கள், 4 இதழ் பூக்கோலம், 2 வரிசைகளில் தலா, 3  ‘ப’ வடிவ குறியீடுகள் வரைந்து, அவற்றை சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, வரலாற்று கால மக்களின் வாழ்வியலை குறிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், நலகுண்டலப்பள்ளி அன்பழகன், பாலாஜி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar