Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிவன்புரம் ஐயப்பன் கோவிலில் சுவாமி ... கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் சுவாமி தரிசனம் கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 டிச
2024
04:12

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை நாரலப்பள்ளி பஞ்., நலகுண்டலப்பள்ளி அருகே, மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, 3 கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர். 


இது குறித்து, ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பொதுவாக, பாறை ஓவியங்களை வரைய பயன்படுத்திய வண்ணம் மற்றும் அவை வெளிப்படுத்தும் கருத்தை, 3 காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை, செஞ்சாந்து புதிய கற்காலத்தையும், வெண்சாந்து பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்று காலம் எனவும் வகைப்படுத்துவர். கண்டறியப்பட்ட இந்த பாறை ஓவியங்கள், மூன்று கால கட்டத்திலும் வரையப்பட்டுள்ளன. செங்குத்து பரப்பிலுள்ள, 2 மனித உருவங்களில், ஒன்று செஞ்சாந்திலும், மற்றது வெண்சாந்திலும் இறந்தவரின் நினைவாக வரையப்பட்டுள்ளது. இந்த மரபே பின்னாளில் நடுகல்லானது. கூரை பரப்பில் அலங்கரிக்கப்பட்ட சாய்ந்த பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரண்டு சக்கரங்கள், 4 இதழ் பூக்கோலம், 2 வரிசைகளில் தலா, 3  ‘ப’ வடிவ குறியீடுகள் வரைந்து, அவற்றை சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, வரலாற்று கால மக்களின் வாழ்வியலை குறிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், நலகுண்டலப்பள்ளி அன்பழகன், பாலாஜி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar