சென்னையிலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உத்திரமேரூர். இங்குள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கட்டடக் கலையில் தனிச் சிறப்புடையது. இக்கோயிலிலுள்ள புதுமை, வாயிலில் துவார பாலர்களுக்குப் பதிலாக துவார பாலிகைகள் காட்சி தருவதுதான். கங்கையும், யமுனையுமே அவர்கள் என்று கூறப்படுகிறது.