Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளையல் அலங்காரத்தில் திருச்சி பகவதி ... திருப்புவனம் அருகே முள் படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலம்; குவிந்த பக்தர்கள் திருப்புவனம் அருகே முள் படுக்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி
எழுத்தின் அளவு:
சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
05:01

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் ஐயப்பன் சுவாமி தேர் பவனி நடைபெற்றது.


சிறுமுகை எலகம்பாளையத்தில் கீழ் சபரி ஐயப்பன் கோவிலிலும், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் உள்ளது. இக்கோவிலின், 50வது ஆண்டு மண்டல பூஜையும், ஐயப்பன் தேர் பவனியும் நடந்தது. 1ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன், ஐயப்பன் சுவாமிக்கு அஷ்டாபிஷேகமும், லட்சுமி ஹயக்ரீவருக்கு பஞ்சாபிஷேகமும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை ஐயப்பன் சுவாமிக்கும் லட்சுமி ஹயக்ரீவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 10.30 மணிக்கு ஐயப்பன் சுவாமியின் தேர்பவனி செண்டை மேளத்துடன் புறப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆலாங்கொம்பை அடைந்தது. அங்கு பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். அங்கிருந்து தண்ணீர் தடம், எலகம்பாளையம் முருகன் கோவில், ராமர் கோயில் வழியாக தியேட்டர் மேடு வந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். அங்கிருந்து சக்தி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் சென்றது. அங்கிருந்து சிறுமுகை நகர், நால்ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 108 கலச பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை அடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு படி பூஜையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar