Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலம்; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2025
10:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 


லாடனேந்தலில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், பௌர்ணமி,அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், முத்துமாரியம்மனுக்கு நாகராணி அம்மையார் 57, என்பவர் தினசரி பூஜைகள் செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத மண்டல பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை ஒன்பது மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. மண்டல பூஜையை முன்னிட்டு மார்கழி 18ம் தேதி 45 நாட்கள் விரதமிருந்து நாகராணி அம்மையார் முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இதற்காக கோயில் முன் ஏழு அடி உயரத்தில் கத்தாழை, சப்பாத்தி கள்ளி, உடைமுள் , கருவேல மர முள் உள்ளிட்டவைகளால் ஏழு அடி உயரத்திற்கு முள் படுக்கை தயார் செய்யப்பட்டது. நேற்று காலை நாகராணி அம்மையார் புனித நீராடி விநாயகரை வழிபட்ட பின் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை வலம் வந்தார். முள் படுக்கைக் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்ட பின்பக்தர்களின் கோஷத்தின் இடையே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் ஏறி அமர்ந்து சாமியாடி தவம் செய்தார். லாடனேந்தல், திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெண் சாமியார் முள்படுக்கையில் தவம் செய்யும் காட்சியை தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 14ம் தேதி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சோமசுந்தரம், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar