Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் அலைமோதும் பக்தர் ... ஜோதி தரிசனத்திற்கு கட்டுப்பாடு; சபரிமலை, பெருவழி பாதையில் நான்கு நாட்கள் அனுமதி ரத்து ஜோதி தரிசனத்திற்கு கட்டுப்பாடு; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை சமர்ப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை சமர்ப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
03:01

சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி சபரிமலை போலீஸ் கோ ஆர்டினேட்டரான ஏ.டி.ஜி.பி. க்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் கேரள உயர் நீதிமன்ற சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ். முரளி கிருஷ்ணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் மகர ஜோதியை ஒட்டி விருச்சுவல் கியூ முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங்கில் ஏற்படுத்துள்ள கட்டுப்பாடுகள் பற்றி பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் அதை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சபரிமலை போலீஸ் கோஆர்டினேட்டர் எடுக்க வேண்டும். பத்தணம்திட்டா கலெக்டர் மற்றும் எஸ்.பி., சபரிமலை செயல் அலுவலர், சிறப்பு ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டிசம்பர் 20 முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை சன்னிதானம் பம்பை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உணவுப் பொருட்களுக்கு அதிக விலை வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும். அரவணை உற்பத்தியின் போது சில செட் அரவணையில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவு ஈரப்பதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.


நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பரிசோதனை தீவிர படுத்தப்பட வேண்டும். பக்தர்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். இந்த விசாரணையின் போது சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கைகள் கூறியிருந்ததாவது : பம்பை, எருமேலி , வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் தற்போது 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஸ்பாட் புக்கிங் செய்கிறார்கள். தற்போது சன்னிதானத்தில் வந்தவர்கள் தரிசனம் முடிந்து திரும்பி செல்லாமல் மகரஜோதி தரிசனத்திற்காக தங்கும் நிலை காணப்படுகிறது. இது மகரஜோதி நாளில் சபரிமலையிலும் பம்பையிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar