Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழையையும் பொருட்படுத்தாமல் ... திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்ஸவம் நிறைவு திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
10:01

திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தை உத்திர வருசாபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப் பட்டு ,  நடைபெற்றது விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்  நடைபெற்றது.


ஒவ்வொரு வருடமும்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இரண்டு முறை வருசாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஒன்று ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று வரக்கூடிய ஆனி வருஷாபிஷேகம். இன்னொன்று தை மாதத்தில்  உத்திர வரக்கூடிய தை உத்திர வருஷாபிஷேகம். நேற்ற தை உத்திர வருஷாபிஷேகம் விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடந்தது. கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள்  நடந்தது. அதனை தொடர்ந்து, குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள்  நடந்தது.  பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு மேளதாலங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு சரியாக காலை 8.15 மணிக்கு மூலவர், விமான கலசதிற்கு புனித நீர் ஊற்ற பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சண்முகர் விமான கலசத்திற்கு, பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடந்தது.  மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும், சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும், வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி  அளித்தனர். இந்த தை உத்திரவருஷாபிஷேக விழாவில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar