கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 09:02
கோவை; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு துர்கா - லட்சுமி - சரஸ்வதி என முப்பெரும் தேவியர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.