அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 09:02
கோவை ; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் மூலவர் கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.