பதிவு செய்த நாள்
03
பிப்
2025
11:02
திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த, கீழானுார் கிராமத்தில் வெற்றி பாலா கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில், ஈஸ்வரர், காமாட்சி அம்பாள், பாலாம்பிகை தேவி, மஹா கணபதி மற்றும் முருகன் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கீழானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாக பூண்டி கிராமத்தில் உள்ளது புராதன முனீஸ்வரர் கோவில். முனீஸ்வரரை கிராமத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவில், பக்தர்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதில், கோவில் சுற்றுச்சுவர், முனீஸ்வரர் சிலை உள்ளிட்டவை புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை, சிறப்பு பூஜையும், இரவு 10:00 மணிக்கு பக்தி நாடகமும் நடத்தப்பட்டது.
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி கிராமத்தில் உள்ளது புராதன முனீஸ்வரர் கோவில். முனீஸ்வரரை கிராமத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில், பக்தர்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதில், கோவில் சுற்றுச்சுவர், முனீஸ்வரர் சிலை உள்ளிட்டவை புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை, சிறப்பு பூஜையும், இரவு 10:00 மணிக்கு பக்தி நாடகமும் நடத்தப்பட்டது.