திருப்புத்தூரிலிருந்து பழநிக்கு பக்தர்கள் யாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 03:02
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையை துவங்கினர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுப்பிரமணியருக்கு பழநி யாத்திரை செல்லும் பக்தர்களால் தைப்பூச விழா நடத்தப்படுகிறது. ஜன.5 ல் மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடந்து விழா துவங்கியது. தொடர்ந்து சஷ்டி தினங்களில் சிறப்பு அபிஷேகம், நடந்து வருகிறது. ஜன.20 ல் திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஜன.26ல் சுவாமிக்கும், வெள்ளிவேலுக்கும் அபிஷேகம் நடந்தது. ஜன.29 ல் சங்காபிஷேகம், நேற்று முன்தினம் சஷ்டியை முன்னிட்டு மூலவருக்கு இரவில் அபிஷேகம் நடந்து விபூதிக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் பழநி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கோயிலில் அன்னதானம் நடந்தது. இன்று காலை 6:00 மணி முதல் திருப்புத்தூரிலிருந்து நகர் மற்றும் கிராமங்களிலிருந்து வரும் பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை துவக்கினர். நாளை தை கார்த்திகையை முன்னிட்டு மூலவருக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருப்புத்தூர் வரும் பழநி யாத்திரை பக்தர்களுக்கு ஆறுமுகநகர் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச மருத்துவ முகாம் துவக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு டாக்டர் சி.சுகுமார் தலைமையில் மருத்துவக்குழுவினரால் மருத்துவ பரிசோதனை, மற்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.