Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூரிலிருந்து பழநிக்கு ... திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் யாகசாலை பூர்த்தி திருவந்திபுரம் தேவநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னநைல்லூர் மாயரிம்மன் கோவில் கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி
எழுத்தின் அளவு:
புன்னநைல்லூர் மாயரிம்மன் கோவில் கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி

பதிவு செய்த நாள்

05 பிப்
2025
05:02

தஞ்சாவூர் தஞ்சாவூர் அருகே  புன்னநைல்லூர் மாயரிம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 


 சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு  கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும்.  அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்.  இங்குள்ள மூலவரான அம்மன் புற்றுமாரியம்மன் ஆகும். இந்த அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும்.


இக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாசாலை பூஜை நடைபெறுவதற்காக யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் கடந்த 3ம்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  மகாலட்சுமி ஹோமமும், விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றது. வரும் வெள்ளிக்கிழமை மாலை முதல்காலய யாகசாலை பூஜை தொடங்குகிறது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி துவங்கியது. இதில் அம்மன்கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்படுகிறது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள்பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன.


இந்த தங்க முலம் பூசப்பட்ட கலசம் பொருத்துவதற்காக  எடுத்துவரப்பட்டு பொருத்தப்பட்டது. அதனை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். மேலும், கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுக்ள மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். அப்போது கோவில் உதவி கமிஷனர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதேபோன்று கோவிலில் உள்ள கொடிமரத்திலும் செப்புக்கவசம் பொருத்தப்படுகின்றன. இந்த கவசம பொருத்தும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்து புதிய கொடிமரம் போல காட்சி அளிக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் தை மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 6:00 ... மேலும்
 
temple news
 திருத்தணி; திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; ‘அரோகரா’ கோஷத் துடன் பக்தர்கள் புடைசூழ சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar