Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராயபாளையம் மதுரை வீரன் பட்டத்தரசி ... காதல் கைகூட... கடவுளுக்கு கடிதம் எழுதி உண்டியலில் போடும் பக்தர்கள்! காதல் கைகூட... கடவுளுக்கு கடிதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் திருவடி பட்ட ஒரு எலுமிச்சம் பழம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் திருவடி பட்ட ஒரு எலுமிச்சம் பழம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2025
11:02

புதுக்கோட்டை; தைப்பூசம் அன்று பழநி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழம் ரூ.5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூச நாளை விமர்சியாக கொண்டாடும் வகையில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை மூன்று தினங்கள் பழனியில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அன்னதானம் சமைத்து வழங்கும்போதும் சாமி தரிசனம் உள்ளிட்டவற்றை செய்யும் பொழுதும் ஒவ்வொரு எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்வர். இந்த ஆண்டும் அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்தனர். அந்த எலுமிச்சம் பழத்தை இன்று பழனியில் பெரியநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்கு சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விட்டுள்ளனர்.  பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் 16,000 முதல் 40,000 வரை ஏலம் போன நிலையில் ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு அபிஷேக எலுமிச்சம் பழத்தை ஒரு நபர் 5 லட்சத்து 9 ஆயிரம் என்று ஏலம் எடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar