Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி ... ராக்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்ட நிகழ்ச்சி ராக்கத்தம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம்; முன்னேற்பாடுகள் ஆலோசனை
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம்; முன்னேற்பாடுகள் ஆலோசனை

பதிவு செய்த நாள்

15 பிப்
2025
09:02

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மார்ச் 14ல் நடைபெற உள்ள மாசித்தெப்ப உற்ஸவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட அளவில் நடத்த பக்தர்கள் கோரியுள்ளனர். சிவகங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும்மாசித் தெப்ப உற்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். லட்சக்கணக்கானோர் கூடி தெப்பத்தை தரிசிப்பதுஉண்டு. விழாவின் கடைசி மூன்று நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தெப்பக்குளக்கரை முதல் கோயில் வரை கூட்டம் காணப்படும். மாவட்டத்தில் பெரிய விழாவிற்கான முன்னேற்பாடுகள் போதாமல் பக்தர்கள் ஆண்டுதோறும் அவதிக்குள்ளாகின்றனர். சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்குள் கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்களுக்கு நிழல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தவும், மணிக்கணக்கில் தாமதமாவதைத் தவிர்க்க வி.ஐ.பி., தரிசனத்தை கட்டுப்படுத்தவும் பக்தர்கள் கோரியுள்ளனர்.


மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோட்டோரத்தில் கடைகளை அனுமதிக்காமல் ரோட்டிற்கு வெளியே கடை வைக்கவும், திருப்புத்தூர் ரோட்டில் குறிப்பிட்ட தூரத்திற்கு போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வாகன நிறுத்தத்தை அடிப்படை வசதிகளுடன் அமைக்கவும், பரவலாக குடிநீர் விநியோகத்தையும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள் நிற்க குறிப்பிட்ட இடங்களில் நிழற்கூரை வசதியும், சேகரமாகும் குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் கடைசி நாட்களில் சம்பிரதாயமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகரிக்கும் கூட்டத்திற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இந்த ஆண்டு மார்ச் 14ல் தெப்பம் நடைபெற உள்ளது. உற்ஸவம் துவங்க 20 நாட்களே உள்ள நிலையில் விழா முன்னேற்பாடுகள்குறித்த ஆலோசனைக்கூட்டத்தை விரைவாக நடத்தி, நல்ல தீர்வு எடுக்க முன்வரவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar