ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகன அணிவகுப்பு: பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2025 03:02
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.போக்குவரத்தும் பாதிக்கிறது. பள்ளபட்டி ரோட்டில் உள்ள இக்கோயில் முன் பக்தர்கள் மற்றும் கடைவீதிகளுக்கு வருபவர்களின் டூவீலர்கள் அதிகளவில் நிறுத்தப்படும். அதே நேரம் கார்களையும் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஏற்கனவே நிறுத்திய டூவீலர்களை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கோயிலுக்குள் செல்ல, கொடிமரம் முன் நின்று அம்மனை வழிபட முடியாத நிலை உள்ளது. மேலும் சேர் ஆட்டோக்கள், ஆக்கிரமிப்பு கடைகள் என வத்தலகுண்டு குருவித்துறை என பிஸியாக உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் கோயில் முன் நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். போக்குவரத்து போலீசார் கார் நோ பார்க்கிங் பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.